இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு நடவடிக்கை!
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முழு ஊரடங்கு:
கொரோனா 2வது அலையில் மாநில அரசுகள் தங்களது மாநிலத்தில் உள்ள பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் நோக்கில் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
தமிழக அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – அறிவிப்பு வெளியீடு!
இதில் சில அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு ஜூலை 18 முதல் நடைமுறைக்கு வந்து ஜூலை 27 வரை அமலில் இருக்கும். மணிப்பூரில் தொற்று உறுதி விகிதம் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக உள்ளது என எச்சரிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்கள் முழு ஊரடங்கில் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் சேவைகள் மூடப்படும். மேலும் பின்வரும் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தடுப்பூசி மற்றும் கொரோனா சோதனை தொடர்பான சேவைகள்
- மருத்துவமனைகள், கிளினிக்குகள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அனைத்து மருத்துவ சேவைகளும்
- நீர் விநியோகம், மின்சாரம், தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகள்
- விவசாயம் மற்றும் தோட்டக்கலை தொடர்பான அனைத்து சேவைகளும்
- காவல் நிலையங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள்
- விமான பயணம் மற்றும் சரக்கு லாரிகள் இயக்கம்
- சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம்