கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம்? மத்திய அரசு விளக்கம்!

0
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம்? மத்திய அரசு விளக்கம்!
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம்? மத்திய அரசு விளக்கம்!
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம்? மத்திய அரசு விளக்கம்!

தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டைகள் அவசியம் இல்லை என்று மத்திய அரசு டெல்லி உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஆதார் அட்டைகள்

நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று தீவிரமடைந்து வந்ததையடுத்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவ்வப்போது நிலவி வரும் கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகள் நிமித்தம் வாரக்கணக்கில் மட்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டு நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது கொரோனா 3ம் அலைப்பரவல் தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் இம்முறை மாநிலங்கள் தோறும் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகளாக இரவு மற்றும் வார இறுதி முழு முடக்கம் ஆகியவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா வைரஸை வெல்வதற்கு ஒரே தீர்வு என்பதால், இந்தியாவில் கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனிடையே 15 முதல் 18 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்த அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

கைகலப்பில் முடிந்த அண்ணன் தம்பி சண்டை, செருப்பால் அடிக்க போன சரவணன் – “ராஜா ராணி 2” அதிரடி ப்ரோமோ!

இப்போது கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றால் பயனரின் ஆதார் எண் முக்கிய ஆவணமாக கருதப்பட்டு வந்தது. இதுவரை ஆதார் அட்டைகளை வைத்து தான் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது, ஆதார் அட்டை இல்லாமல் இதுவரை 87 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இனி ஆதார் இல்லாமலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!