மால்கள், உணவகங்கள் மீண்டும் திறக்க அனுமதி? மகாராஷ்டிரா அரசு ஆலோசனை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் 25 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு தளர்வுகள்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் வியாழக்கிழமை புதிதாக 7,242 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 62,90,156 பேருக்கு மொத்தம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 190 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,32,335 ஆகவும் உள்ளது. மாநிலத்தில் தற்போது 78,562 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் நேர்மறை விகிதம் 3.8% ஆக உள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது.
புதிய நிதியாண்டில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு – மேக்ஸ் லைஃப் திட்டம்!
இதனால் மும்பை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மாநில கோவிட் -19 பணிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மால்கள், மல்டிப்ளெக்ஸ் மற்றும் உணவகங்கள் விரைவில் மகாராஷ்டிராவில் 50% திறனில் மீண்டும் திறக்கப்படுவது, கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கும் நேரம் அதிகரிப்பு போன்றவை குறித்து ஆலோசனை செய்தார்.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் தடைகளை நீக்குவது குறித்த முறையான உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார். மும்பையில் உள்ள புறநகர் உள்ளூர் ரயில்களில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் அரசு மேலும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமாவது ரயில்கள் இயக்கப்படும் என்றும் அவர்களை சோதிப்பதற்காக முறையான வழிமுறை தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.