இந்தியாவில் வீரியமெடுக்கும் குரங்கம்மை நோய் – WHO எச்சரிக்கை! அச்சத்தில் பொது மக்கள்!
இந்தியாவில் மட்டுமே தற்போது நான்கு பேருக்கு குரங்கம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நோய் வேகமாக பரவி வருவதால் நோய் பாதித்தவர்கள் 21 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என WHO அறிவித்துள்ளது.
குரங்கம்மை நோய்:
கொரோனா தொற்றை தொடர்ந்து தற்போது குரங்கம்மை நோய் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்த வரைக்கும் கேரளாவில் மூன்று பேருக்கு குரங்கம்மை தொற்றும், தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்றும் பதிவாகியுள்ளன. அதாவது, டெல்லியில் 34 வயது நபருக்கு குரங்கம்மை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் புண்கள் மூலமாகவே வைரஸ் வேகமாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருபத்தொரு நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும், காயங்களில் இருக்கும் கிருமிகள் காற்றில் பரவுவதை தடுக்க காயங்களை முழுமையாக மூடி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமாகும் வரைக்கும் யாரிடமும் நெருங்கி பழக வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 16,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி தொழிளார்களுக்கான ஓய்வு அறிவிப்பு – அரசாணை வெளியீடு
மேலும், ஒருவரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்தாலே குரங்கு காய்ச்சல் வேகமாக பரவிவிடும். இதனால், மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. மேலும், காய்ச்சல், தலைவலி, தசை வலிகள், முதுகு வலி, குறைந்த ஆற்றல், வீங்கிய நிணநீர் முனைகள் ஆகியவை குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். பொதுமக்கள் யாருக்காவது இந்த அறிகுறிகள் தென்பட்டால் அச்சப்படாமல் தகுந்த சிகிச்சையையும், மேல்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.