இந்தியாவில் வீரியம் குறையும் கொரோனா நோய்த்தொற்று – ஒரே நாளில் 86,498 பேர் பாதிப்பு!!
இந்தியாவில் கடந்த மூன்று மாத காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்து நாட்டில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது நாளடைவில் தொற்றின் வேகம் வெகுவாக குறைந்து வருகிறது. அந்த வகையில் சுமார் 63 நாட்களுக்கு பின்பு இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. இந்த தகவல் மக்களை சற்று ஆறுதல் அடைய செய்துள்ளது.
தமிழக அரசு ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்கள் பணி நிரந்தரம் – அரசுக்கு கோரிக்கை!
தற்போது கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 86,498 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,89,96,473 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் புதிதாக 2,123 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,51,309 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 1,82,282 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,73,41,462 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் 13,03,702 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் 23,61,98,726 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.