ஜூலை 16 வரை தலைநகர், புறநகரில் ஊரடங்கு உத்தரவு – மலேசியா அரசு!
கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து மலேசிய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு
மலேசியாவில் கொரோனா பேரலை தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் 12 ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்து ஜூன் 28 வரை அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் மலேசியா முழுவதும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையானது தினசரி 5 ஆயிரத்துக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டு வந்தது. எனினும் பொது மக்களின் நடவடிக்கைகளுக்காக சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஜூலை 5க்கு பிறகு கூடுதல் தளர்வுகள் அமல்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
இந்நிலையில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான சிலாங்கூர் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து, இவை நாளை (ஜூலை 3) முதல் அமலுக்கு வருவதாக மலேசிய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மலேசியாவில் இரண்டு அடர்த்தி மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஜூலை 16 வரை 2 வாரங்களுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தவிர அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டும் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல வேண்டுமெனவும், அவரது வீடுகள் இருக்கும் தொலைவில் இருந்து குறிப்பிட்ட 10 கிலோ மீட்டர் தொலைவுகளில் உள்ள கடைகளுக்கு மட்டுமே பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் 6,988 கொரோனா புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பாதியளவு பாதிப்புகள் தலைநகர் கோலாலம்பூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மட்டுமே பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.