இந்தியாவில் முக்கிய ரயில்கள் ரத்து – காரணம் இது தான்! பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வரும் காரணத்தால் நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயிலை ரத்து செய்ய ரயில்வே துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக இலக்கை அடையும் வகையில் இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது.
ரயில்வே துறை
இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்து வரும் காரணத்தால் நாட்டின் வட மாநிலங்களான குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான மின்வெட்டுகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு இருக்கும் பொது மக்கள் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அதனால் மத்திய அரசு கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. மேலும் அந்த தட்டுப்பாடுகளை போக்குவதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் பெற புதிய வழிமுறை? அமைச்சர் விளக்கம்!
அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் 1,100 பயணிகள் ரயிலை ரத்து செய்ய ரயில்வே செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் விரைவாக அதன் இலக்கைக்கு செல்லும் வரையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்து வரும் 20 நாட்களுக்கு பயணிகள் ரயில்கள் வரிசையாக ரத்து செய்யப்பட இருக்கின்றன. அதனை தொடர்ந்து, ரயில்வே துறையின் இந்த முடிவு ரயில் பயணிகளை வருத்தமடைய செய்துள்ளது.
அதனை தொடர்ந்து, அனல் மின் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் நிலக்கரி விரைவாக அங்கு செல்லும் வகையில் ஏற்கனவே 670 ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை அடுத்தடுத்து மாதங்களுக்கும் தொடரும் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரயில்கள் திடீரென ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு செல்வோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்ய உள்ளவர்கள் கவனமாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.