இனி இரட்டிப்பாகும் ஓய்வூதியம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
இனி இரட்டிப்பாகும் ஓய்வூதியம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இனி இரட்டிப்பாகும் ஓய்வூதியம் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இனி இரட்டிப்பாகும் ஓய்வூதியம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அமைப்புசார் துறைகளில் ஒருவர் பணிக்குச் சேரும் போது அவரது அடிப்படை ஊதியம் ரூ.15000-க்கு கீழ் இருந்தால், அவர் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ் 95) கீழ் வருவார். இந்நிலையில் இனி ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்படும், மேலும் வரம்பு நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வூதியம் இரட்டிப்பு:

ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்ச வரம்பை நீக்குவது குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது, தற்போது அதிகபட்சமாக மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதிய சம்பளம் ரூ.15,000 மட்டுமே. அதாவது, உங்கள் சம்பளம் என்னவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000 மட்டுமே. இந்த வரம்பை நீக்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் கடந்த வருடம் ஆகஸ்ட், ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என்று இந்திய யூனியன் மற்றும் இபிஎப்ஓ தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்த போதிலும் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

ஊழியர்கள் EPF-ல் உறுப்பினராகும் அதே நேரத்தில் EPS-லும் உறுப்பினராகின்றனர். மேலும் இபிஎப்-ல் ஊழியர்கள் தனது சம்பளத்தில் 12% கொடுக்கிறார், அதே அளவு தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது. அந்த தொகையில் ஒரு பகுதி 8.33% இபிஎஸ்-க்கு செல்கிறது. மேலும் ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15000 என்று கருதப்படுகிறது, இதன் அடிப்படையில் இபிஎஸ்-ன் கீழ் ஒரு ஊழியர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியீடு? முழு விபரம் இதோ!

  • செப்டம்பர் 1, 2014க்கு முன்னர் நீங்கள் இபிஎஸ்-ல் சேர்ந்திருந்தால் ஓய்வூதியர்களின் அதிகபட்ச மாதச் சம்பள வரம்பு ரூ.6500 ஆக இருக்கும்.
  • செப்டம்பர் 1, 2014 க்கு பிறகு நீங்கள் இபிஎஸ்-ல் சேர்ந்திருந்தால், அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.15,000 ஆக இருக்கும்.
  • ஊழியர்கள் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து இருந்தால் அது 1 வருடமாக கருதப்படும், அதுவே 6 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் அது கணக்கில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • ஒரு ஊழியர் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அது 15 ஆண்டுகளாகக் கருதப்படும். ஆனால் அவர் 14 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வேலை செய்திருந்தால் அது 14 ஆண்டுகள் என்றே கணக்கில் கொள்ளப்படும்.
  • மேலும் இபிஎஸ்-ன் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.1000 மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7500 ஆகும்.
  • மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x வருடங்கள் இபிஎஸ் பங்களிப்பு)/70 என்று கணக்கிடப்படுகிறது.
  • ஓய்வூதியம் ரூ.15,000 மற்றும் 30 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மாதாந்திர ஓய்வூதியம் = 15,000X30/7= ரூ 6428 ஆகும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!