சிலிண்டர் விலை முதல் ரேஷன் அரசி வரை.. இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

0
சிலிண்டர் விலை முதல் ரேஷன் அரசி வரை.. இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
சிலிண்டர் விலை முதல் ரேஷன் அரசி வரை.. இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
சிலிண்டர் விலை முதல் ரேஷன் அரசி வரை.. இந்தியாவில் இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

நாட்டில் தற்போது அமலில் இருக்கும் பல விஷயங்களில் அக்டோபர் 1-ம் தேதியான இன்று முதல் பல மாற்றங்கள் நடக்க உள்ளது. இவை அனைத்தையும் மக்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

முக்கிய மாற்றங்கள்:

நாட்டில் எப்போதும் ஏதேனும் மாற்றங்கள் நடந்தால், அவை அனைத்தும் மாதத்தின் முதல் நாளில் தான் நடக்கிறது. அதன்படி, அக்டோபர் 1-ம் தேதியான இன்று பல முக்கிய மாற்றங்கள் நடக்க இருக்கிறது. இன்று நடக்க உள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவற்றை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

அடல் பென்சன் யோஜனா:

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் முதியோர்கள் பயனடைந்து வந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினை பற்றிய முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, இனி வருமான வரி செலுத்துவோர் இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர முடியாது. அதிலும், இந்த மாற்றம் அக்டோபர் 1-ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வட்டி விகிதம் உயர்வு:

புதியதாக அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கிசான் விகாஸ் பத்ரா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி உயர்த்தப்படுகிறது. ஆனால், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கவனம் மக்களே.. தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.3 ) Power Off – உங்க ஏரியாவும் இந்த லிஸ்ட்ல இருக்கா?

ரெப்போ வட்டி:

செப்டம்பர் 30 ம் தேதியான நேற்று மத்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. உயர்த்தப்பட்ட வடியானது 5.90% ஆகும். இதனால் பொதுமக்களுக்கான கடன்களின் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படும்.

Exams Daily Mobile App Download

ரேஷன் திட்டம்:

மத்திய அரசு கொரோனா கால கட்டத்தில் தொடங்கப்பட்ட கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் இலவசமாக ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை:

மாதத்தின் முதல் நாளில் வழக்கமாக சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த மாதம் சிலிண்டரின் விலை கூடுதலாக இருந்தது. இதனால் இந்த மாதம் சிலிண்டர் விலை குறையுமா என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!