துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அவனி லெகாராக்கு புத்தம் புதிய பரிசு – மஹிந்திரா கார் நிறுவனம் அறிவிப்பு!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில் 10 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் தூங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாராக்கு புத்தம் புதிய பரிசு ஒன்றை வழங்க இருப்பதாக மஹிந்திரா கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
பரிசு அறிவிப்பு:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற இருந்த பாராலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தொற்றின் தாக்கம் குறைந்த பின்னர் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் வரும் செப் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர்.
மதுரைக்கு வானிலை கால நிலை பேரழிவு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவனி லெகாரா என்ற மாற்றுத்திறனாளி வீராங்கனை கலந்து கொண்டார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர். இவர் இந்த போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே படைத்துள்ள உலக சாதனையை சமன் செய்துள்ளார். 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே பாராலிம்பிக்கில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ள நிலையில், நான்காவதாக தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியாவிற்கு தங்கத்தை பெற்றுத் தந்த இந்த தங்க மங்கைக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா, தற்போது அவனிக்கு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது. இன்னும் விற்பனைக்கு வராத மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்யுவி காரின் முதல் காரை இவருக்கு பரிசாக அறிவித்துள்ளது. இது இவரது திறமைக்கு கிடைத்த மரியாதை என்றால் அது மிகையாகாது.