மகாத்மா காந்தியின் கொள்ளுபேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை – தென் ஆப்ரிக்கா நீதிமன்றம் உத்தரவு!!
தென் ஆப்ரிக்காவில் தொழிலதிபர் ஒருவரிடம் சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக கூறி 3 கோடியே 33 லட்சம் லட்சம் லஞ்சம் பெற்ற காரணமாக மகாத்மா காந்தியின் கொள்ளுபேத்திக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்ரிக்கா:
வெளிநாட்டவரிடம் இருந்து இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. சுதந்திர போராட்டத்தில் அவர் கையாண்ட அகிம்சை முறை தான் முக்கிய காரணம். இதனால் தற்போது வரை இவரது புகழ் இந்திய நாட்டு மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து வருகிறது. இந்நிலையில் இவரது கொள்ளுப்பேத்தி தென் ஆப்ரிக்காவில் செய்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
உதவி பேராசிரியர் தேர்வு இடஒதுக்கீடு குழப்பம் – அமைச்சர் விளக்கம்!!
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்தி தென்னாபிரிக்க தொழிலதிபர் ஒருவரிடம் சுங்க வரி இல்லாமல் பொருட்களை இறக்குமதி செய்து தருவதாக கூறி ரூ.3.33 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இந்த வழக்கு தென் ஆப்ரிக்கா நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது காந்தியின் கொள்ளுப்பேத்தி மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீதிமன்றம் அவருக்கு கடும் தண்டனை வழங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி காந்தியின் கொள்ளுபேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் அவர் கட்டாயம் 7 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காந்தியின் வம்சத்தில் உள்ளவர் தற்போது மோசடி வழக்கில் சிறை சென்றுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.