அனைத்து கடைகளும் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் புதிய கொரோனா வழக்குகள் தொடர்ந்து குறைந்து வருவதால், நாக்பூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாக்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் வீதம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் ஜூன் 1 முதல் 15 ஆம் தேதி வரை புதிய தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன் படி காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனைத்து அத்தியாவசிய கடைகளும் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரவு 11 மணி வரை வீட்டு விநியோகங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷாப்பிங் சென்டர்கள், மால்கள் தவிர தனித்து இயங்கும் கடைகளும் தொடர்ந்து செயல்படலாம்.
வாட்ஸ் ஆப் குழுவில் பெற்றோர் பிரதிநிதி – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தவிர ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நாக்பூர் மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும், சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு அலுவலகங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர பொதுமக்கள் பிற்பகல் 3 மணிக்கு பிறகு தெருக்களில் சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிரா அரசு ஜூன் 1 முதல் மும்பை, தானே, புனே மற்றும் நாக்பூர் போன்ற முக்கிய நகரங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Very Worst 👎👎👎 Web site headline very very bed
I swear you I do my best work hard