இன்று முதல் 20 மாவட்டங்களில் கடைகளை திறக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா 2 ஆம் அலை காரணமாக மாநிலங்கள் தோறும் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 20 மாவட்டங்களில் மட்டும் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வுகள் அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, தானே, புனே, அவுரங்காபாத் மற்றும் நாக்பூர் உட்பட 10 முக்கிய நகரங்களில் ஜூன் 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தவிர இன்று (ஜூன் 1) முதல் அந்த நகரங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு – முதல்வருடன் ஆலோசனை!!
இது குறித்து மே 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் வீதமும், ஆக்ஸிஜன் படுக்கைகளின் இருப்பு வீதத்தை கணக்கில் கொண்டு 20 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அந்த மாவட்டங்களில் வசிக்கும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் மும்பை தமனி சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, இவை மீண்டுமாக தொடர்ந்தால் கூடுதல் தடைகளை விதிக்கப்போவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். தவிர மஹாராஷ்டிராவில் நேற்று (ஜூன் 1) ஒரு நாளில் 15,077 கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 22 மாவட்டங்களில் பாதிப்பு விகிதம் 10% க்கும் குறைவாகவே உள்ளது. இதனால் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 10 நகரங்களில் பாதிப்பு விகிதம் மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை கணக்கில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.