மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு நீக்கம், உணவகங்கள் இயங்க அனுமதி – அரசு அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால், அங்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கியும், கட்டுப்பாடுகளில் தளர்வுகளையும் அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
இரவு ஊரடங்கு நீக்கம்:
கொரோனா தொற்றின் பாதிப்புகள் நாட்டிலேயே அதிக அளவில் பாதித்த மாநிலங்களில் முக்கியமானது மகாராஷ்டிரா. அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்த காரணத்தால் நோய் தடுப்பு நடவடிக்கையாக அங்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. சமீபத்தில் அங்கு நோய் பாதிப்புகள் குறைந்து வருவதால் தொற்று நோய் கால கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை அளித்துள்ளது. மேலும், மும்பையில் திங்கள் கிழமை 1000 க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே நோய் தொற்று பதிவாகியுள்ளதால், மகாராஷ்டிரா அரசு செவ்வாய்க்கிழமை கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்தது.
புதிய வழிகாட்டுதல்கள்:
- கோவிட்-19 தொற்றுநோய் வருவதற்கு முன்பு உள்ளது போல் கடற்கரைகள், தோட்டங்கள், பூங்காக்கள் வழக்கமான நேரப்படி திறந்திருக்கும்.
- பொழுதுபோக்கு/தீம் பூங்காக்கள் செயல்பாட்டுத் திறனில் 50% உடன் தொடர்ந்து செயல்படும்.
- நீச்சல் குளங்கள், நீர் பூங்காக்கள் 50% திறனுடன் திறந்திருக்கும்.
- கோவிட்-19 தொற்றுநோய் வருவதற்கு முன்பு இருந்தது போல் உணவகங்கள், திரையரங்குகள், ஆகியவை வழக்கமான நேரத்தின்படி 50% திறனுடன் திறந்திருக்கும்.
- பஜனைகள் மற்றும் அனைத்து உள்ளூர், கலாச்சார மற்றும் நாட்டுப்புற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் 50% அரங்கத்தின் கொள்ளளவுடன் அனுமதிக்கப்படும்.
- திருமணங்களுக்கு திறந்த அரங்கம் மற்றும் விருந்து அரங்குகளின் திறனில் 25% அல்லது 200நபர்கள் இவற்றில் எது குறைவோ அதன் படி விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
- இரவு 11.00 மணி முதல் காலை 5.00 மணி வரை மக்கள் நடமாடுவதற்கு எந்த தடையும் இல்லை.
- உள்ளூர் சுற்றுலா தலங்கள் வழக்கமான நேரப்படி திறந்திருக்கும்.
- வாராந்திர சந்தைகள் வழக்கமான நேரப்படி திறந்திருக்கும்.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்