மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? மாநில முதல்வர் விளக்கம்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாநிலத்தின் மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 4,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 65 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 64,97,872 பேருக்கு நோய்த்தொற்று பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,155 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63,08,491 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக அகமதுநகர் மாவட்டத்தில் 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு – பலர் வேலை இழக்கும் அபாயம்!
மாநிலத்தில் தலைநகர் மும்பை மற்றும் இரண்டாவது தலைநகரான நாக்பூரில் மூன்றாவது அலை ஏற்கனவே தொடங்கியிருப்பதாக மாநில எரிசக்தி அமைச்சர் டாக்டர் நிதின் ராவத் மற்றும் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் ஆகியோர் எச்சரித்துள்ளனர். மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 3ம் அலையின் பாதிப்பில் ஒரு மாதத்தில் 60 லட்சம் வழக்குகள் பதிவாகும் என்றும், அதனை தடுக்க மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் வருவதாகவும் அறிவித்துள்ளார்.
ஜப்பானில் அவசர நிலை செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு!
தற்போதைய நிலவரப்படி, மாநிலத்தில் கோவிட் நோயாளிகளுக்கு 200 டன் மற்றும் பிற நோயாளிகளுக்கு 150 டன் மருத்துவ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் 3ம் அலை பாதிப்பின் போது ஆக்ஸிஜன் தேவை மிக அதிகமாக இருக்கும். ஆக்ஸிஜன் தேவை தினசரி 700 டன்களை தாண்டினால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். தற்போது மாநிலத்தில் மீண்டும் நோய் தடுப்பு நடவடிக்கையாக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.