பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் 500 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுபடுகளால் கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பணிகள் தேர்வாணையமான SSC பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5000 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. நடப்பாண்டு இப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு – அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து மத்திய குடிமைப்பணியியல் தேர்வான UPSC தேர்வுகள் முதல் நிலை தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து வங்கி துறையிலும் காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளில் 40,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த வருடம் தகவல் வந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஸ்கேல் II 400 காலிப்பணியிடங்கள் ஸ்கேல் III 100 காலிப்பணியிடங்கள் என 500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் DA முதல் HRA வரை உயர்வு? முழு விவரம் இதோ!
இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் மேலும் நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இணையதளம் வாயிலாக பிப்ரவரி 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.