மே 1 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா பரவல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மே 1 முதல் ஜூன் 13 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ப ஊரடங்குகளை அறிவித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளில் இல்லாத அளவும் கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என உலக சுகாதாரத்துறை கூறுகிறது. அதனால் இந்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர் கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
பல மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்தும், கட்டுப்பாடுகளை அதிகரித்தும் வருகின்றன. இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மஹாராஷ்டிரா அரசு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கோடை கால விடுமுறையாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் மஹாராஷ்டிராவில் மே 1 முதல் ஜூன் 13 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் மினி ஊரடங்கு உத்தரவு? பிரதமர் இன்று ஆலோசனை!!
மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதைய சூழல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்த பிறகு அப்போதைய கொரோனா பரவல் நிலையை கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மஹாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்