இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் ‘இது’ கட்டாயம் – மகாராஷ்டிரா அரசின் அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது மாணவர் சேர்க்கையில் அதிகமாக முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பரிசீலனை மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அத்துடன் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இதற்காக நீதிபதி பி.வி ஹர்தாஸ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
தற்போது இந்த குழு தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை பரிசீலனை செய்து தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோரின் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்கியுள்ளது.
தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அறிக்கை தகவல்!!
ஒருவேளை பெற்றோர்களால் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க முடியாத நிலையில், மாணவர்களுக்கு தற்காலிகமாக சேர்க்கை வழங்கப்பட வேண்டும். மேலும் இதனை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பள்ளிகளுக்கான மானியத்தை திரும்ப பெறுவது அல்லது அங்கீகாரத்தை இழக்க செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.