அக்டோபர் முதல் வாரத்தில் பருவத்தேர்வு நடைபெறும்
கொரோனா வைரஸ் பரவலினால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்கி பெற்றதாக அறிவித்து மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் யுஜிசி ஆனது இறுதி பருவ தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனை ரத்து செய்ய வழக்கு தொடரப்பட்டு இருந்தாலும் நீதிமன்றம் ஆனது இந்த தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என அதிரடியாக அறிவித்து உள்ளது. இதனால் இறுதி பருவ தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் பருவத்தேர்வு நடைபெறும் என அம்மாநில கல்வி அமைச்சர் தற்போது அறிவித்து உள்ளார். மேலும் அக்டோபர் மாதம் தான் தேர்வு என்பதனால் செப்டம்பர் முழுவதும் தேர்விற்கு தயாராக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்விற்கு தயாராகலாம்.
இருப்பினும் தேர்வினை நேரடியாக நடத்த தற்போது சூழல் இல்லை. எனவே தேர்வினை ஆன்லைனில் நடத்தவும் காரணிகள் ஆராயப்படுகிறது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்