பிறந்தநாள் விழாவிற்கு வரும் ராதிகா, கோபியின் புதிய திட்டம் – “மகா சங்கமம்” சீரியல் அடுத்த வாரம்!
விஜய் டிவியில் தற்போது “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நட்சத்திரங்கள் இணைந்து கலக்கும் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. அதில் ராதிகா வருவதை தடுக்க கோபி புதிய திட்டம் ஒன்றை போடுகிறார். அதை கதிர் கேட்டுவிடுகிறார். இதெல்லாம் அடுத்து வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
மகா சங்கமம்:
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலில் மகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சென்னைக்கு வந்திருக்கின்றனர். அப்போது பாக்கியா பிறந்தநாளுக்கு ராதிகாவை அழைக்கிறார். ராதிகா இது பற்றி கோபியிடம் சொல்ல கோபி எனக்கு பழக்கம் இல்லாத இடத்திற்கு நான் வரமாட்டேன் என சொல்கிறார். அதை கேட்டு ராதிகாவுக்கு கோவம் வருகிறது.
புது கார் வாங்கிய குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மீனா – வைரலாகும் வீடியோ!
பாக்கியா வீட்டு நிகழ்ச்சிக்கு நீங்கள் வராமல் இருந்தால் நான் உங்களிடம் பேசவே மாட்டேன் என ராதிகா சொல்கிறார். அதனால் கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. பாக்கியாவிடம் நான் சொல்வதை எல்லாம் கேட்காமல் ஏன் ராதிகாவை கூப்பிட்டாய் என கேட்க பாக்கியா அது எப்படி உங்களுக்கு தெரியும் என சொல்கிறார். மேலும் மூர்த்தி தனம் வந்ததால் கோபியால் கேட்க முடியாமல் போய் விடுகிறது. அதனால் கோபி பதட்டமாக இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபி ராதிகாவுக்கு போன் செய்ய ராதிகா நாளை மாலை டீச்சர் வீட்டிற்கு போவதற்கு தயாராக இருங்கள் என சொல்கிறார். பின் கோபி எந்த டீச்சர் என கேட்க பாக்கியா வீட்டிற்கு போக வேண்டும் நீங்க வராமல் இருந்தால் கண்டிப்பாக உங்களிடம் நான் பேசமாட்டேன் என சொல்கிறார். பின் கோபி அவருடைய நண்பருக்கு போன் செய்து ராதிகா நாளைக்கு என் அப்பாவின் பிறந்தநாள் விழாவிற்கு வருகிறாளாம் என சொல்கிறார். அப்போ ரொம்ப சந்தோசம் நீ மாட்டிக் கொள்வாய் என கேட்க, அப்போது கோபி நான் அப்படி எல்லாம் செய்யமாட்டேன் நாளைக்கு பிறந்தநாள் விழா நடத்த விடமாட்டேன் என சொல்கிறார். அதை கதிர் பின்னால் நின்று கேட்டுவிடுகிறார், இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.