கோபி போனில் பேசுவது யார் என கண்டுபிடித்த ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் பாக்கியா – மகா சங்கமம் சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்களின் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாத்தாவின் பிறந்தநாளுக்கு பாக்கியா ராதிகாவை அழைக்க கோபி பாக்கியா பழக்கம் பற்றிய உண்மை பாக்கியாவிற்கு தெரிய வர இருக்கிறது.
மகா சங்கமம்:
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” மகா சங்கமம் சீரியலில், தற்போது தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சென்னைக்கு பாக்கியாவின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். குடும்பத்தில் அனைவரும் இவர்கள் வந்ததை நினைத்து சந்தோசப்பட ஆனால் கோபிக்கு அவர்கள் வந்திருப்பது பிடிக்காமல் இருக்கிறது. கோபியால் எங்கேயும் தனியாக இருக்க முடியவில்லை. ராதிகா உடன் போன் பேச மொட்டை மாடிக்கு செல்ல அங்கேயும் ஜீவா, எழில், கதிர் இருக்கின்றனர்.
புதிதாக கார் வாங்கிய “கலக்கப் போவது யாரு” நாஞ்சில் விஜயன் – அவரே வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!
அதனால் கோபி கடுப்பில் இருக்கிறார். தாத்தாவின் பிறந்தநாளுக்கு இன்னும் சிலரை அழைக்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார். தனம் நானும் உங்களுடன் வருகிறேன் என சொல்ல பாக்கியாவும் சரி என சொல்கிறார். பின் தனமும் பாக்கியாவும் சென்று ராதிகாவை அழைக்கின்றனர். ராதிகா கண்டிப்பாக வருவதாக அவர்களிடம் சொல்கிறார். இந்த விஷயம் கோபிக்கு தெரியாமல் இருக்க போகிறது. கோபியிடம் சொன்னால் கண்டிப்பாக வரமாட்டார் என்பதால் ராதிகா சொல்லாமல் இருக்க போகிறார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபி அடிக்கடி இரவு போன் பேசுவது பற்றி ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். பின் ஐஸ்வர்யா கோபி போனை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அது யாருடைய நம்பர் என பார்க்க அது ராதிகாவின் நம்பர் என தெரிகிறது. அதனால் ஐஸ்வர்யா இது பற்றி பாக்கியாவிடம் சொல்ல போகிறார். இது குறித்து அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. மேலும் தாத்தாவின் பிறந்தநாளில் பெரிய உண்மை வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.