கோபி ராதிகாவுடன் பேசுவதை கண்டுபிடித்த தனம் – “மகா சங்கமம்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கோபி மீது தனத்திற்கும் மூர்த்திக்கும் சந்தேகம் வருகிறது. அதனால் கோபியின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடிவு செய்கின்றனர். இந்நிலையில் தனத்திற்கு கோபி ராதிகாவுடன் பேசுவது தெரிய வர அது பற்றி கோபியிடம் கேட்கிறார்.
மகா சங்கமம்:
மகா சங்கமம் சீரியலில் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குடும்பத்தில் அனைவருக்கும் புது துணி எடுத்து சந்தோசமாக இருக்கின்றனர். இந்நிலையில் பாக்கியா கோபி சொன்னதை கேட்காமல் ராதிகாவை பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கிறார். அப்போது ராதிகா கோபியிடம் டீச்சர் வீட்டு நிகழ்ச்சிக்கு நீங்க கண்டிப்பாக வர வேண்டும் என சொல்கிறார். ஆனால் கோபி எனக்கு அவர்களை யார் என தெரியாது அதனால் வர முடியாது என சொல்கிறார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – டான் படக்குழுவினர் என்ட்ரியால் குஷி!
அதனால் ராதிகாவுக்கு கோவம் வருகிறது, நீங்க வரவில்லை என்றால் நான் உங்களுடன் பேசவே மாட்டேன் என சொல்கிறார். இந்நிலையில் கோபி பாக்கியாவிடம் சென்று ராதிகாவை கூப்பிட வேண்டாம் என சொன்னேன் ஆனால் ஏன் கேட்காமல் இப்படி செய்கிறாய் என கேட்கிறார். அது எப்படி உங்களுக்கு தெரியும் என பாக்கியா கேட்க கோபி எதையோ சொல்லி சமாளிக்கிறார். கோபி சத்தம் போடுவதை பார்த்து மூர்த்தி தனம் வந்து சமாதானம் செய்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கோபி நடவடிக்கைகள் சரியில்லை என செல்வி சொல்கிறார். அதை கேட்டு தனம் வருத்தப்பட மூர்த்தியிடம் இது பற்றி சொல்கிறார். இரவெல்லாம் அவருக்கு போன் வருகிறது. அவருடைய நடவடிக்கை எதுவும் சரியாக இல்லை என மூர்த்தி சொல்ல, எழில் அவருடைய அப்பாவிடம் சரியாக பேசாமல் இருப்பது எல்லாம் பார்த்தால் எதோ சந்தேகமாக இருக்கிறது என மூர்த்தி சொல்கிறார். இனி வரும் எபிசோடுகளில் கோபி ராதிகா உடன் தான் பேசுகிறார் என்ற உண்மை தனத்திற்கு தெரிய வருகிறது. தனம் இது பற்றி கோபியிடம் கேட்க போகிறார்.