கோபி தான் தன்னுடைய அப்பா என சொன்ன இனியா, அதிர்ச்சியில் ராதிகா – “மகா சங்கமம்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் சற்று மாறுதலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாக்கியா வீட்டு விசேஷத்திற்கு ராதிகா வர இருக்கிறார். அப்போது இனியா தன்னுடைய அப்பா இது தான் என கோபி புகைப்படத்தை காட்ட ராதிகா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
மகா சங்கமம் சூப்பர் திருப்பம்:
சின்னத்திரையில் சீரியல்களில் விறுவிறுப்பை அதிகரிக்கவும், சுவாரஸ்யமான திருப்பங்களை கொண்டு வரவும் இரண்டு சீரியல்களை ஒன்றிணைத்து மகா சங்கமம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது பாக்யலட்சுமி சீரியலில் கோபியை மாட்டிவிடவே மகா சங்கமம் வைக்கப்பட்டுள்ளது. தாத்தாவின் 75வது பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக பாசத்துடன் பழகுவது ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.
கணேஷால் அவமானபடுத்தப்படும் கண்ணம்மா – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
இந்நிலையில், பாக்கியாவிடம் கோபி யாரையும் அழைக்க வேண்டாம் என கண்டிஷன் போட்டு இருக்கிறார். ஆனால் பாக்கியா அவரது பேச்சை மீறி ராதிகாவை தனத்துடன் சென்று அழைக்கிறார். அதனால் ராதிகா பாக்கியா வீட்டிற்கு போக வேண்டும் என கோபியிடம் சொல்கிறார். ஆனால் கோபி எனக்கு அதெல்லாம் பிடிக்காது என சொல்ல, உடனே ராதிகா முகத்தில் அப்படி ஒரு கோவம் வருகிறது. நீங்க இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்தால் இனிமேல் நான் பேசவே மாட்டேன் என ராதிகா சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் கோபி என்ன செய்வது என தெரியாமல் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார். ஆனால் மூர்த்தி மற்றும் தனம் சமாதானம் செய்து கோபியை அழைத்து செல்கின்றனர். இந்நிலையில் ராதிகா பாக்கியா வீட்டு நிகழ்ச்சிக்கு வருகிறார். அப்போது கோபி ஓடி ஒளிந்துக் கொள்கிறார். பின் இனியாவிடம் உங்க அப்பா எங்கே என ராதிகா கேட்க இனியா போனில் கோபி புகைப்படத்தை காட்டி இது தான் என்னுடைய அப்பா என சொல்கிறார். அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.