மதுரையில் நாளை (செப்.20) “இந்த” இடங்களில் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் நாளை (செப்.20)
மதுரையில் நாளை (செப்.20) "இந்த" இடங்களில் மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு!
மதுரையில் நாளை (செப்.20) “இந்த” இடங்களில் மின்தடை – மின்சார வாரியம் அறிவிப்பு!

மதுரையில் அனுப்பானடி மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (செப்.20) மழைக்கால அவசர பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை

தமிழகத்தில் மின் கம்பங்களில் உண்டாகும் பழுதுகளை உடனடியாக சரி செய்ய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மின்தடை ஏற்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாளை மதுரையில் அனுப்பானடி மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் துணைமின் நிலையத்தில் மழைக்கால அவசர பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன்தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் கண் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், சாமநத்தம், பெரியார்நகர், தாய் நகர், கங்கா நகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், காமராஜர் தெரு, எஸ்.எம்.பி.காலனி, முந்திரிதோப்பு, சேவுகப் பெருமாள் கோவில் பகுதிகள், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மாரியம்மன் தெப்பகுளம் தெற்கு, அடைக்கலம் காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி- தெப்பகுளம்ரோடு, அனுப்பானடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரங்காபுரம், சண்முகா நகர், நவரத்தினம், தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

தமிழகத்தில் அடுத்த ஒரு ஆண்டிற்கு சீரான குடிநீர் விநியோகம் – முக்கிய தகவல்!

இதே போல் பிஷர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிக்காரத்தோப்பு, மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சி அெவன்யூ, திருமகள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!