மதுரை காமராஜர் பல்கலையில் ஒரு மணி நேரத்திற்கான ஊதியத்துடன் வேலை..!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Guest lecturers பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு தகுதியான ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியான ஆசிரியர்கள் இப்பதிவை முழுமையாக வாசிப்பதன் மூலம் உங்கள் பதிவுகளை எளிமையாக செய்யலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
MKU காலிப்பணியிடங்கள்:
சமீபத்தில் வெளியாகிய அறிவிப்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Guest lecturers பணிக்கு Commerce, English, History மற்றும் Mathematics பாடங்களில் தலா 02 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
MKU கல்வித் தகுதி:
Guest lecturers பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Commerce, English, History மற்றும் Mathematics பாடங்களில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Center
MKU ஊதிய விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு (HOURLY BASIS) ஒரு மணி நேரத்திற்கான ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
MKU தேர்வு முறை:
Guest lecturers பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்ட உள்ளார்கள். நேர்காணல் ஆனது 23.02.2022 அன்று நடைபெறும். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்களையும் அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி, விண்ணப்ப படிவங்களை தாயார் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 21.02.2022 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளையுடன் கால அவகாசம் முடிவதால் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.