மதுரையில் ஜூலை 4 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் வெளியீடு!
தமிழகத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் அவ்வப்போது மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரை மாடக்குளம் பகுதியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் வருகிற ஜூலை 4 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என அரசு தெரிவித்ததை அடுத்து பல இடங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் மின்சார பராமரிப்பு செய்யப்படும் பகுதிகள் பற்றியும், அதனால் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்தும் மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடும். அதன் படி மதுரை மாடக்குளம் பகுதியில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி மின்சாரா பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
இது குறித்து மதுரை மாவட்ட அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பசுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் அங்கிருந்து மின்சார விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பசுமலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு தடை – ஜூலை 10 வரை எச்சரிக்கை நோட்டீஸ்!
அதில் மாடக்குளம் மெயின் ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவி நகர், கிருஷ்ண நகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், செரூப், பெரியார் நகர், மல்லிகை கார்டன், அய்யனார் கோவில், சத்தியமூர்த்தி நகர், அருள்நகர், அவர்லேடிபள்ளி, காயத்திரி தெரு, பிரீத்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர், சவுபாக்கியா நகர், துர்கா நகர், லைன்சிட்டி, எஸ்.ஆர்.வி. நகர், அமைதிசோலை, சுந்தர்நகர், ஜே.ஜே.நகர், ஹார்விபட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்