வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – இதை செய்தால் வாகனம் பறிமுதல்!! எச்சரிக்கும் உயர்நீதிமன்றம்!!
தமிழகத்தில் பெரும்பாலான வாகனங்களில் பதிவு எண்கள் மிகவும் சிறியதாகவும் அதைவிட மற்ற சின்னங்கள், பிரபலங்கள் படங்களை பெரியதாகவும் பதிவிட்டு கொள்கின்றனர். இது மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக உள்ளது. மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
நம்பர் பிளேட்
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான வாகனங்களில் நம்பர் பிளேட் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தலைவர்களின் புகைப்படங்களோ அல்லது தெய்வ புகைப்படங்களோ அல்லது பிரபல நட்சத்திரங்களின் புகைப்படங்களையோ பதிவு எண்ணை விட பெரியதாக பதிவிட்டு கொள்கின்றனர். இது மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இது தொடர்பாக வழக்கு ஒன்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் தங்களின் நம்பர் பிளேட்டில் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற புகைப்படங்களை மிகவும் பெரியதாகவும் பதிவு எண்ணை சிறியதாகவும் பதிவு செய்துள்ளனர். இதனை எவ்வாறு போக்குவரத்து அலுவலர்கள் அனுமதிகின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் பரபரப்பு – மூளையில் சிப் பொறுத்த எலான் மஸ்க் தயார் – வெளியான முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
அத்துடன் மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனங்களில் நம்பர் பிளேட் இடம் பெற்றிருக்க வேண்டும். இதில் மற்ற விவரங்கள் இடம் பெற கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.