மதுரையில் தமிழக அரசு வேலை – ஒரு வருகைக்கு ரூ.1000/- தொகுப்பூதியம் !
மதுரை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அன்னையர் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துனர் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்க்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மதுரை மாவட்ட சமூக நலத்துறை |
பணியின் பெயர் | Counsellors |
பணியிடங்கள் | 03 |
கடைசி தேதி | 15.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
ஆற்றுப்படுத்துனர் (Counsellor) – 03 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகத்தில் ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல் துறையில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.1,000/- (ஒரு வருகைக்கு) வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
தேர்வர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அதிகப்படியான தகவல்களை அறிவிப்பின் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் 15-02-2021 அன்றுக்குள் கண்காணிப்பாளர், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், கே.கே.நகர், மதுரை -625020 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அசல் ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tn madiurai