மதுரையில் காலியாக உள்ள அரசு வேலைவாய்ப்புகள் – 8/10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள உதவியாளர்/டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், காவலாளிகள் மற்றும் அவுட்ரீச் தொழிலாளி பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மதுரை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை |
பணியின் பெயர் | உதவியாளர் / தரவு பதிவாளர், பாதுகாவலர் & காவலர் |
பணியிடங்கள் | 6 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சமூக பாதுகாப்பு துறை காலிப்பணியிடங்கள்:
- Assistant/Data Entry operator – 1
- Gaurd – 2
- Watchmen – 2
- Outreach Worker – 1
Assistant/Data Entry operator பணிக்கான தகுதி விவரங்கள்:
- உதவியாளர் / தரவு பதிவாளர் பணியிடத்திற்கு 10ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு முதுநிலை சான்று பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்குவதில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பத்தார்கள் 22.04.2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
பாதுகாவலர் பதவிக்கான தகுதி விவரங்கள்:
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.
காவலர் பதவிக்கான தகுதி விவரங்கள்:
- தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 22.04.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், மூன்றாவது தளம், மதுரை-625020 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.