தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மதுரையில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.
தற்காலிக பட்டாசு கடை:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை அன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம். மக்கள் அன்றைய தினங்களில் அதிக அளவு பட்டாசுகளை வாங்கி குடும்பத்தார்களுடன் வெடித்து மகிழ்வர். தமிழகத்தில் பட்டாசுகளுக்கு பெயர் போன இடம் சிவகாசி ஆகும். கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பணியும் ஏராளமான பணியாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா அதிகம் பரவும் காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ எதிர்பார்ப்பு!
இதனால் விற்பனையாளர்கள் வருமானம் இழந்தனர். தீபாவளி தினத்தன்று அதிகம் பட்டாசுகள் வெடிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசடைவதால் பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பட்டாசு கடைகள் மக்கள் வருகை இன்றி காணப்பட்டது. தீபாவளி தினத்தன்று பட்டாசு விற்பனைக்காக ஏராளமான தற்காலிக பட்டாசு கடைகளை அமைப்பர். இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் – ஜாக்டோ ஜியோ எதிர்பார்ப்பு!
இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு இ – சேவை மையங்கள் மூலம் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான உரிமக் கட்டணம் ரூபாய் 500 ஆகும். கடை அமைக்கப்படும் இடங்கள், மற்ற முக்கிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.