அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – மதுரை ஆட்சியர் அறிவிப்பு!!

0
அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - மதுரை ஆட்சியர் அறிவிப்பு!!
அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - மதுரை ஆட்சியர் அறிவிப்பு!!
அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – மதுரை ஆட்சியர் அறிவிப்பு!! 

மதுரை மாநகரில் உள்ளவர்கள் அரசு நிர்ணயித்துள்ள வருமானத்திற்குள் இருந்தால் அரசு வழங்கும் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அரசின் நலத்திட்டம்:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மாவட்டம் தோறும் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் வீடுகள் இல்லாத ரோட்டோர ஏழைகளுக்கு தமிழக அரசின் நிதியில் இருந்து அனைவர்க்கும் வீடு திட்டம் மூலம் வீடுகள் கட்டி தருவது வழக்கம். இதனால் வீடின்றி தவிக்கும் மக்கள் பெரும் பலனடைந்து வருகின்றனர்.

ஆண்டுக்கு இருமுறை ‘நீட் தேர்வு’ – மத்திய அரசு ஒப்புதல்

மதுரை ராஜாக்கூர் பகுதி:

இந்நிலையில் மதுரை ராஜாக்கூர் பகுதியில் அரசு சார்பில் 1088 அடுக்குமாடி குடியிருப்புகள் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டடப்பட்டுள்ளது. இந்த குடி இருப்புகளுக்கு அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட பகுதிகளில் குடியிருந்து வரும் மக்களை இங்கு குடி அமர்வு செய்ய முன்னுரிமை அளிக்கப்படும், மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கும், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – 90% மாணவர்கள் வருகை!!

அரசுகளின் பங்களிப்பு:

இந்த திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் நிதி ஒதுக்கப்படும், அதுபோக வீட்டின் உரிமையாளர்களும் தங்களின் சார்பாக ரூ.1.75 லட்சம் பங்கு தொகையாக வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் பெயரிலோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ சொந்தமாக வீடுகள் வேறு எங்கும் இல்லை என்பதையும், தங்களது வருவாய் மாதம் ரூ.25,000 கீழ் உள்ளது எனவும் சான்றிதழ் அளிக்க வேண்டும். இந்த திட்டத்தில் வீடுகள் பெற விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே உள்ள முகவரிக்கு பிப்ரவரி 10 முதல் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக பொறியாளர்,
குடிசை மாற்று வாரிய அலுவலகம்,
169, கே.கே.நகர் மெயின் ரோடு,
மதுரை – 625020.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!