திரும்ப பெறப்படும் பென்ஷன் தொகை.. ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – அரசு நடவடிக்கை!

0
திரும்ப பெறப்படும் பென்ஷன் தொகை.. ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் - அரசு நடவடிக்கை!
திரும்ப பெறப்படும் பென்ஷன் தொகை.. ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – அரசு நடவடிக்கை!

அரசு, தங்களின் ஊழியர்கள் முதுமை காலத்தை சிரமமின்றி வாழ பென்ஷன் தொகையை வழங்கி வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பென்ஷன்தாரர்கள் சிலர் இன்னும் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்காமல் உள்ளதால் அவர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

பென்ஷன்:

மதுரையில் ஏறத்தாழ 40,000 பேர் அரசிடம் இருந்து பென்ஷன் தொகையை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்கள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிப்பது கட்டாயம். பொதுவாக அவர்கள் அந்த சான்றை ஜூலையில் நடைபெறும் நேர்காணலில் (மஸ்டரிங்) சமர்ப்பிக்க வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

இவ்வாறு நடத்தப்பட்ட நேர்காணலில் 99 சதவீதத்தினருக்கும் மேல் பங்கேற்றனர். ஆனால் 150க்கும் மேற்பட்ட பென்ஷன் பெறுவோர் அந்த நேர்காணலில் பங்கேற்கவில்லை. இதனால் கருவூலத்துறை இவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. மேலும் இவர்களில் சிலர் பென்ஷன் தொகையை வங்கிகளில் இருந்து பல காலமாக எடுக்காமலும் உள்ளனர்.

நகை வாங்க போறிங்களா? தங்கம் விலை உயரவில்லை – இன்றைய நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க!!

எனவே அந்த தொகையை அரசிடமே மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓய்வூதிய கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் ஒரு சிலர் அடுத்து வரவாய்ப்புள்ளது. அவர்கள் பற்றி நன்கு ஆராய்ந்து அவர்களின் கணக்குகள் திருப்பி அளிக்கப்படும் என மாவட்ட கருவூல அலுவலர் அண்ணாத்துரை கூறியுள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!