மதுரை ‘எய்ம்ஸ்’ மாணவர் சேர்க்கை ஜூலை 26ல் அறிக்கை தாக்கல் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!!
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் மாணவர் சேர்க்கை மற்றும் மருத்துவமனை வெளிநோயாளிகள் பிரிவு தொடங்குவது குறித்து மாநில அரசு வரும் ஜூலை 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உள்ள தோப்பூரில் தொடங்குவதற்காக மத்திய அரசு ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தொடங்குவதால் எளிய மக்கள் அதிக அளவில் பயனடைவார்கள். மருத்துவமனையுடன் சேர்ந்து மருத்துவ கல்லூரியும் இங்கு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் தோப்பூரில் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிக வளாகம் அமைத்து வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ படிப்பிற்கு மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
தமிழக தனியார் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணம் வசூல் – ஆணையர் உத்தரவு!
முன்னதாக வழக்கின் விசாரணையில் மாணவர் சேர்க்கை மற்றும் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்குவதற்கான மாற்று இடம் ஏற்பாடு செய்வது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள், மதுரை எய்ம்ஸ் 150 மாணவர் சேர்க்கைக்கு தற்காலிக இடம் ஒதுக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய ஜூலை 16ம் தேதி எய்ம்ஸ் நிர்வாக வாரிய கூட்டம் நடக்கிறது.
TN Job “FB Group” Join Now
கூட்டத்தின் முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பின்னர் தமிழக அரசு அது குறித்து ஆய்வு செய்ய இருக்கிறது என்று பதில் அளித்தார். தற்போது மதுரை எய்ம்ஸ் மாணவர் சேர்க்கை மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை போன்றவை குறித்து மாநில அரசின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் தற்போதைய நிலை குறித்து ஜூலை 26ம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.