ஜூன் 21 முதல் மெட்ராஸ் பல்கலை செமஸ்டர் தேர்வுகள் – ஊரடங்கு எதிரொலி!!
மெட்ராஸ் பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் தள்ளிவைப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பரவல் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்திலேயே கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்காக மூடப்பட்டது. தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வந்ததால் தமிழகத்தில் பல முக்கிய தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. பள்ளிகளின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
கடையில் வாங்கும் பொருள் காலாவதியாகி இருந்தால் செய்ய வேண்டியது என்ன?
இந்நிலையில், மெட்ராஸ் பல்கலையின் இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான 2021 ஏப்ரல் மாத எழுத்துத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக , உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேர்வுகள் ஜூன் 15ம் தேதி தொடங்குவதாக அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஜூன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகளுக்கான கேள்வித்தாள் தயாரிப்பு மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
எனவே மெட்ராஸ் பல்கலையின் தேர்வுகள் ஜூன் 21ம் தேதி தொடங்கும் என்று பல்கலைக்கழக பதிவாளர் இன்சார்ஜ் என் மதிவனன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுகளுக்கான அட்டவணை ஜூன் 14 ஆம் தேதி பல்கலைக்கழக வலைத்தளமான www.unom.ac.in ல் வெளியிடப்படும் என்றும், ஹால் டிக்கெட்டுகள் ஜூன் 15 அன்று பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்வுகள் மூன்று மணி நேரம் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.