மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 40+ காலிப்பணியிடங்கள் – முக்கிய வெளியீடு..!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு (2021) Assistant programmer பதவிக்கு என்று தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக இப்பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அறிவித்தல் கடிதம் வெளியிட்டுள்ளது.
அறிவித்தல் கடிதம் வெளியீடு :
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பில் Assistant programmer பதவிக்கு என்று 40க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது. அதன் பின் இப்பணிக்காக தேர்வுகள் நடத்தப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னால் தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிட வேண்டிய ஒன்று. இந்த தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தற்போது அடுத்த கட்டமாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிவிப்பில் Assistant programmer பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 09.02.2022 அன்று அழைக்கப்பட்டுள்ளார்கள். இது குறித்த அறிவிப்பு கடிதம் (Intimation Letter) வெளியாகியுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் உங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த தகவல்களை அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இப்பதிவின் முடிவில் அறிவிப்பு கடிதம் பதிவிறக்கம் செய்து கொள்ள தேவையான இணையதள முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் இதன் மூலம் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.