தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தற்போது இப்பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை பார்க்கலாம்.
ஆர்.எஸ்.எஸ் பேரணி
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தமிழக அரசு செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டுமென காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் இந்த ஊர்வலத்தின் போது கலவரத்தை தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்ப கூடாது எனவும், சாதி, மத கலவரங்களை தூண்டும் விதித்திலும் பேசக்கூடாது எனவும் விதிமுறைகளை நீதிமன்றம் விதித்தது.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கினால் தமிழகத்தில் சாதி, மதம் கலவரம் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் இராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதே போல் மற்ற மாவட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனால் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டது.
தொடரும் மின்துறை ஊழியர்களின் போராட்டம் – அரசின் நடவடிக்கை என்ன? ஆளுநர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், தமிழகத்தில் வருகிற நவம்பர் 6-ம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்த உத்தரவை மீறி தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் நவம்பர் 6-ம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி தகுந்த பாதுகாப்புடன் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்