மத்திய பிரதேசம் மாநிலத்தில் புதிய மதுக் கொள்கை அமல் – முதல்வர் உரை!
நாடு முழுவதும் இன்று (ஜனவரி 26) 74-வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மது ஒழிப்பு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மது ஒழிப்பு:
இன்று (ஜனவரி 26) நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் பல மாநிலங்களில் முதல்வர் தலைமையில் தேசிய கோடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் குடியரசு தினத்தன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மது அருந்துவதை முற்றிலும் நிறுத்தும் நோக்கில் புதிய கலால் வரிக் கொள்கையை அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் உழைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை – கேரள மாநிலத்தில் அமல்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் 74-வது குடியரசு தினத்தையொட்டி ஜபல்பூரில் உள்ள கேரிசன் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பேசுகையில், போதையில்லா சமூகத்தை உருவாக்க உங்கள் பிறந்த நாள், திருமண நாள் அல்லது வேறு எந்த நிகழ்விலும் மரக்கன்றுகளை நட வேண்டும் என தெரிவித்துள்ளார். புதிய மதுக்கொள்கை குறித்து மத்திய பிரதேச மாநில முதல்வர் அறிவித்தது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.