12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!!
கொரோனா தொற்று:
கொரோனா தொற்றின் முதல் அலை பாதிப்பு குறைந்த காரணத்தால் நாட்டில் உள்ள பள்ளிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதனால் மாநில அரசுகள் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பள்ளிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலகம் மற்றும் பள்ளிகள் நேரம் மாற்றம் – மாநில அரசு உத்தரவு!!
மத்தியபிரதேச கல்வி வாரியம்:
மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் பொதுத்தேர்வுகளை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பில், “மத்திய பிரதேச தேர்வு வாரியம் முன்னதாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஏப்ரல் 30ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் தேர்வை மே 30ம் தேதிக்கு மேல் நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடத்தப்படும். செய்முறை தேர்வுகள் மே 15ம் தேதிக்குள் நடத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
மத்தியபிரதேச மாநிலத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. கோடை விடுமுறை ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் ஜூன் 9ம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும். மேலும், மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஏப்ரல் 30ம் தேதி வரை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்