36 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ‘LVM-3’ ராக்கெட் – பிரதமர் பாராட்டு!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 36 செயற்கைகோள்களுடன் ‘எல்விஎம்-3’ ராக்கெட் இன்று விண்ணில் எந்தவித தடையுமின்றி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராக்கெட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2-வது ஏவுதளத்தில் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கைகோள்களுடன் எல்விஎம் 3- எம் 2 ராக்கெட் இன்று நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45ஆவது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த வகை ராக்கெட் ஆனது திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் உள்ளிட்ட வகை எந்திரங்களால் இயக்கப்படும். இந்த 36 செயற்கைக்கோள்கள் 640 டன் எடை கொண்டவை.
Follow our Instagram for more Latest Updates
இந்த செயற்கைகோள்கள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படாது என்பதால் ஜிஎஸ்எல்வி என்ற பெயரிலிருந்து எல்விஎம் என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் OneWeb நிறுவனம் உலக நாடுகள் அனைத்திற்கும் அதிவேக இன்டெர்நெட் சேவையை வழங்க செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி தற்போது 36 செயற்கோள்கள், இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ பணியாளர் தேர்வுகளிலும் ‘தமிழ் மொழித்தேர்வு’ கட்டாயம் – அரசாணை வெளியீடு!!
இதையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 36 செயற்கைகோள்களுடன் ‘எல்விஎம்-3’ ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சந்திராயன்-3 விண்கலம் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.