1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு இடைவேளைக்கு தட்டு, டம்ளர்!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - உணவு இடைவேளைக்கு தட்டு, டம்ளர்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - உணவு இடைவேளைக்கு தட்டு, டம்ளர்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உணவு இடைவேளைக்கு தட்டு, டம்ளர்!

புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பரவல் குறைந்து வந்ததால் 1 முதல் 12ம் வகுப்புகள், கல்லூரி மாணவர்களுக்கும் நாளை முதல் நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தலை அரசு வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவுறுத்தல்:

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலை தொடங்கியதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி பல்வேறு மாநில அரசுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் 10ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டது.

கொரோனா பாதித்த இந்திய வீரர் ஷிகர் தவானின் தற்போதைய உடல்நிலை – அவரே அளித்த விளக்கம்!

இதையடுத்து தொற்று மேலும் அதிகரித்து வந்ததால் 10ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை கடந்த மாதம் 18ம் தேதி முதல் மூடப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை புதுவை அரசு அறிவித்து வருகிறது. இந்த அறிவிப்பில் 1ம் வகுப்பு முதல் பள்ளிகள், கல்லூரிகள் நாளை மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பள்ளிகளில் வகுப்பறைகளை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு அறிவித்துள்ளார். தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

1. கொரோனா வழிகாட்டுதலை பின்பற்ற தேவையான வகுப்பறைகள் இல்லாத சூழலில் 1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாள்தோறும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

2. மாணவர்கள், ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் அத்துடன் கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டவைகளை கட்டாயமான முறையில் செய்ய வேண்டும்.

3. மாணவர்கள், பள்ளி ஊழியர்கள், ஆசிரியர்கள் கட்டாயமான முறையில் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் இவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும்.

4. கொரோனா அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும்.

5. கொரோனா தடுப்பூசியை செலுத்திய ஆசிரியர்களை மட்டும் பள்ளிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.

6. மேலும் பள்ளிகளில் இறைவணக்கம், கூட்டமாக கூடுவது, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தக் கூடாது.

7. பள்ளி வாகனங்களை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும். வாகனங்களை நாள்தோறும் சுத்தப்படுத்த வேண்டும்.

8. மாணவர்களுக்கு மதிய உணவு, பால் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதை வழங்குபவர்கள் தங்கள் கைகளில் கையுறை அணிந்து பரிமாற வேண்டும். இதனை பெறுவதற்கு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தட்டு, டம்ளர்களை எடுத்து வர வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!