LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புதிய விதிகள் அமல்!

0
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு - புதிய விதிகள் அமல்!
LPG சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புதிய விதிகள் அமல்!

இந்தியாவில் சாமானிய மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் கிடைக்கும் வகையில் “பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா”, என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இத்திட்டத்தில் உள்ளவர்கள் பயன் பெறும் வகையில் 200 ரூபாய் மானியத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்துள்ளார்.

சிலிண்டர் மானியம்

இந்தியாவில் எரிவாயு சிலிண்டரின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் கிடைக்கும் வகையில் மத்திய அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா என்ற திட்டத்தை மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 9 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இணைந்துள்ளனர். அத்துடன் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தில் இணைவதற்கு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் 18 வயது மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வாழ்நாள் சான்றிதழ் குறித்த முக்கிய அறிவிப்பு!

இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுவதுடன் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட மானியத்தொகை வழங்கப்படும். இந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தது. அந்த வகையில் சிலிண்டரின் விலையும் மாதந்தோறும் அதிகரித்து கொண்டே இருந்தது. இது சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் நிதி நிலையை சரிசெய்ய பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் தனது அறிவிப்பில், இந்தியாவில் “பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு இந்த ஆண்டு மாதந்தோறும் ஒரு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு பயனாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!