LPG சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!
வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1018 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் விலை அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிலிண்டர் விலை
இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மாதத்திற்க்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் ஏற்ற இறக்கத்தை பொறுத்து தான் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலையை தினசரி மாற்றியமைப்பது போல சிலிண்டரின் விலையும் அவ்வப்போது உயர்த்தப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள்? கொரோனா பரவல் எதிரொலி!
கடந்த ஏப்ரல் மாதத்தில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.965.50 காசுகளாக இருந்தது. இதன் பின்னர் மே மாதம் 7 ஆம் தேதி தான் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின்னர் மே 19 ஆம் தேதி மீண்டும் கேஸ் சிலிண்டரின் விலை திருத்தப்பட்டு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டர் 1018 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
பின்னர், ஜூன் மாதம் முழுக்க கேஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1068.50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் வேளையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்