அடேங்கப்பா.. ஒரே நாளில் சரசரவென குறைந்த தங்கத்தின் விலை – ரூ. 520 சரிவு..நகைப்பிரியர்கள் ஹாப்பி!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 520 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தங்கம் விலை :
உலகில் ஆசிய நாடுகளில் தான் அதிக அளவு தங்கம் மற்றும் தங்கத்தால் ஆன அணிகலன்களை மக்கள் உபயோகப்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் கொரோனா பரவலால் ஏற்பட்ட வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, ஊரடங்கு, சர்வதேச விமான தடை போன்றவைகளால் தங்கத்தின் விலையானது உயர்ந்து வந்தது. இந்த நேரத்தில் இந்தியா தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது.
இதனால் தங்கத்தின் விலை திடீரென ரூ.1000 அதிகரித்து சவரன் ரூ. 40,000 ஐ எட்டியது. அதன் தொடர்ச்சியாக GST வரியும் உயர்த்தப்பட்டது. இதனால் தங்கம் விலையானது சாமானிய மக்கள் முதல் நகைப்பிரியர்கள் வரை அனைவருக்கும் பொருளாதார ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியது. மற்ற நாடுகளில் தங்கம் என்பது ஒரு வகையான முதலீடாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் தங்கம் சேமிப்பு என்பதையும் தாண்டி கலாச்சாரமாக உள்ளது. அதனால் தங்கம் வாங்க இந்திய மக்கள் அதீத ஆர்வம் காட்டுவர்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
கடந்த ஒரு மாத காலமாவே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இன்று (10.10.2022) காலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து ஆபரணத் தங்கம் ரூ. 38,440க்கு விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கம் விலை அதிரடியாக ரூ. 520 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ரூ.38,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் ரூ.4,775-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளி ஒரு கிலோ ரூ.1,500 குறைந்து ரூ,64,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்