மீண்டும் புயல் கிளம்பிருச்சா.. டிச.05ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை மையம் எச்சரிக்கை!
அந்தமான் அருகே வருகிற டிசம்பர் 5ம் தேதி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் இது படிப்படியாக புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்து பனிப்பொழிவு அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை வானிலை மையம் இன்றைய வானிலை அறிக்கையில் தெரிவிதுள்ளதாவது, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்திற்கு இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 2,3ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக மாறவுள்ள ரேஷன் கடைகள்.. புதுமையை புகுத்திய அரசு – மக்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
இதே போல் டிசம்பர் 4ம் தேதி அன்று வட தமிழகம், தென் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற டிசம்பர் 5ம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.