தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் – 6 மணி நேரத்தில் வலுவிழக்கும்… வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது குறித்த முக்கிய தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த மழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தொடர் மழையால் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். மேலும் வழக்கம் போல சென்னையில் மழை நீர் சூழ்ந்து வெள்ளம் போல காட்சியளித்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மழை நீர் வடிகால் பணியை போர்க்கால அடிப்படையில் உடனுக்குடன் செய்து வருகிறது. இன்னும் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரவில்லை. இந்த நேரத்தில் கடந்த வாரம் தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தங்கம் வாங்க நல்ல நேரம் வந்தாச்சு.. இன்று அதிரடியாக குறைந்த விலை – உடனே முந்திக்கோங்க!
Exams Daily Mobile App Download
மேலும் இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (நவ.22) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.