தமிழகத்தில் ஏப்ரல் முதல் 442 தாழ்தள பேருந்துகள் இயக்கம் – உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்!!
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. தற்போது இதற்கு தமிழக அரசு தரப்பில் கூறியவற்றை பற்றி பார்ப்போம்.
தாழ்தள பேருந்துகள்
தமிழகத்தில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த மனுவில், தாழ்தள பேருந்துகள் அரசு சார்பாக கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு சார்பாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக சென்னையில் மட்டும் 37.4% தாழ்தள பேருந்துகள் தயார் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் TELEGRAM செயலி – சூப்பர் அம்சங்கள்!
மேலும் நீதிபதிகள், அரசு தரப்பு கொள்முதல் செய்யக்கூடிய அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக ஏன் கொள்முதல் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளனர்.