விரைவில் குறைந்த செலவில் புற்றுநோய் சிகிச்சை? சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை!
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதற்கான சிகிச்சைக்கான செலவும் அதிகரித்து வருகிறது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு இன்று மத்திய சுகாதார செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
புற்றுநோய் சிகிச்சை:
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக புற்று நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி இந்தியாவில் தான் புற்று நோயின் காரணமாக அதிக அளவில் உயிரிழப்புகள் நிகழ்வதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டில் 7.84 லட்சம் பேர் புற்றுநோயால் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது 13.92 லட்சமாக உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்றாலும் கூட புற்றுநோய்க்கான சிகிச்சையின் செலவை பார்த்தே பலரும் நோய்க்கான தகுந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள பயப்படுகின்றனர். புற்றுநோய் ஒரு நோயாளிக்கு இருக்கிறதா என்பதனை கண்டறியவே ஆரம்பக் கட்ட பரிசோதனை, பின் முறையான நீண்ட கால சிகிச்சை, கண்காணிப்பு, மருந்துகள், சிகிச்சை பின் கண்காணிப்பு என பல விதமான சிகிச்சைகள் இருக்கின்றன. இதற்கான மொத்த செலவு இந்தியாவில் அதிகம். இதனாலேயே பலரும் புற்றுநோய்க்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ள தயங்குகின்றனர்.
Developer ஆக சூப்பர் பணிவாய்ப்பு – TCS நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்து புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு மாறுபடுகிறது. அதாவது ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், பிஹார் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் புற்றுநோய்க்கான சிகிச்சை ஒரு லட்சமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இதை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறது. புற்றுநோய்க்கான செலவு நாளுக்கு நாள் அதிகரித்த படி இருப்பதால் மலிவு விலையில் புற்றுநோய் சிகிச்சையை வழங்குவது குறித்த விவாதம் இன்று நடைபெற இருக்கிறது.