ஆதார் அலுவலகத்தில் எக்கச்சக்க காலி பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஆதார் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
காலிபணியிடங்கள்:
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இயக்குனர், உதவி இயக்குநர் ஜெனரல் (தொழில்நுட்பம்), இயக்குனர் (தொழில்நுட்பம்) ஆகிய பணியிடங்களுக்கு மொத்தமாக 5 காலி பணியிடங்கள் உள்ளன. அதாவது, இயக்குனர் பதவிக்கு 3 காலி பணியிடமும், உதவி இயக்குநர் ஜெனரல் (தொழில்நுட்பம்) பதவிக்கு 1 காலி பணியிடமும், இயக்குனர் (தொழில்நுட்பம்) பணிக்கு 1 காலி பணியிடமும் உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன கல்வி தகுதிகள், வயது வரம்பு, தேர்வு செயல்முறை என்பது குறித்தான அனைத்து விவரங்களையும் UIDAI வெளியிட்டுள்ளது. அதாவது, இயக்குனர் பதவிக்கு விண்ணப்பிக்க மாநில, யூனியன் பிரதேச அரசு, பொதுத் துறை நிர்வாகம், தன்னாட்சி நிறுவனம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இயக்குனர் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்ப பிரிவில் நான்கு ஆண்டு பட்டம் அல்லது கணினியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு – 25,000 ரூபாய் வரை சம்பளம்! முழு விவரம் இதோ!
விருப்பமும், தகுதியும் பெற்ற விண்ணப்பதாரர் uidai.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 தான் கடைசி நாள் ஆகும். இந்த பணியிடங்கள் குறித்தான கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால் https://uidai.gov.in/images/career/VC_dt_01_07_2022.pdf என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.