சிலிண்டர் விலை முதல் மாத சம்பளம் வரை – ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!
2021 – 2022 புதிய நிதியாண்டில் மக்களின் அத்தியாவசிய தேவைகளின் விலை ஏற்றம் காண இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்கை நிலை பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. அதன்படி, புதிய நிதியாண்டில் நிகழ உள்ள மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
மக்களின் ஊதியம்:
ஏப்ரல் 1ம் தேதி முதல் மத்திய அரசின் புதிய ஊதிய விதி நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன்படி தொழிலாளர்களின் சம்பளம் 50% அளவுக்கு உயர்த்தப்பட்டு, படி 50 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும். இதனால் சமூக பாதுகாப்பு விதிகளின் படி அடிப்படை ஊதியத்தில் 12% அளவுக்கு நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையத்திற்கு செலுத்த வேண்டும். இதனால் தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 4 முதல் 10 சதவீதம் வரை குறையும்.
விமான நிலையங்களில் கொரோனா விதிமுறை மீறல் – அபராதம் விதிக்க முடிவு!!
எரிவாயு விலை ஏற்றம்:
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை கணக்கீடு செய்கிறது. தற்போது சமையல் எரிவாயு விலை 819 ஆக உள்ளது. புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் இன்னும் விலை ஏறும் வாய்ப்பு உள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
பொதுத்துறை வங்கிகள்:
புதிய நிதிக்கொள்கையின் விளைவாக பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் மற்றும் வங்கிகள் இணைப்பு போன்றவற்றால் மக்கள் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது. வங்கிகள் இணைப்பு நடைமுறையில் உள்ள வங்கிகளின் செக் புக், IFSC code போன்றவை மாற்றப்படும். இதனால் குறிப்பிட்ட வங்கிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படக்கூடும்.
விமான நிலையங்களில் கொரோனா விதிமுறை மீறல் – அபராதம் விதிக்க முடிவு!!
EPF மற்றும் TDS வரி:
புதிய நிதியாண்டில் EPF மற்றும் TDS வரி போன்ற வரிகள் புதிதாக நியமிக்கப்பட உள்ளது. இதனால் EPF திட்டத்தில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு வரி விதிக்கப்படும். இதனால் ஊழியர்களின் வருமானம் குறையும். TDS தொகையிலும் வரிக்கு புதிய விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது. வருமான வரி ரிட்டர்னை முறையாக தாக்கல் செய்யாதவர்களுக்கு அவர்களது வங்கி டெபாசிட் பணத்திற்கான TDS இரண்டு மடங்கு அதிகமாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
அத்தியாவசிய பொருட்களை விலை ஏற்றம் அடைவதற்க்கு மக்கள்&அரசியல்வாதிகள், ஜவுளிக்கடை,நகைக்கடை,ஊழியர்கள் அதிகமாக கருப்பு பணத்தை பதுக்கி வைப்பதன் மூலமாக ஏற்றம் அடைகிறது ஏழை மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கிறது.இதை சரிசெய்ய வரும்தேர்தலில் மக்கள் வாக்களிக்க கூடாது.