தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நீண்ட கால விடுமுறை? வைரஸ் காய்ச்சல் எதிரொலி!
அண்மையில் தான் புதுச்சேரியில் பள்ளி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
கிட்டத்தட்ட 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் மாணவர்களின் கற்றலில் சுணக்கம் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தொற்று குறைந்ததன் பின்னர் தற்போது இந்த ஆண்டில் இருந்து தான் மீண்டும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
வார்த்தையை அளந்து பேசு.. இனியாவை ஓங்கி அறைந்த ராதிகா – திகைத்து போன கோபி, பாக்கியா!
இதற்கு முடிவு கட்டுவது போல தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் புதுச்சேரி அரசு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள், இவ்வாறான காய்ச்சல் மழைக் காலத்தில் பரவக் கூடியது தான் என்றும், இது குறித்து பயம் கொள்ள தேவையில்லை என்றும் விளக்கினார்கள்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற விடுமுறை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. ஏற்கனவே விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாவது, “காய்ச்சல் அதிகரிப்பால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பது சிறந்தது” என தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்”.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்